0 0
Read Time:1 Minute, 30 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றிய கீழே குண்டல பாடி ஊராட்சியில் நியாய விலை கடை புதிய கட்டிடத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய கழகசெயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கிளைக் கழகச் செயலாளர் ஞானம் வரவேற்றார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் கலந்துகொண்டு ஊராட்சியில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நியாய விலை கடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜவான் குமார் சக்கரபாணி மனோகரன் பால்ராஜ் தனசிங் பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

நிருபர்;பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %