0 0
Read Time:2 Minute, 16 Second

சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து, 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குளங்கரை பகுதியில், கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒரு வீட்டுக்கு சென்ற மின் இணைப்பு ஓயரை அறுத்துவிட்டு சென்றுள்ளது.

இதனை அறியாமல் அவ்வழியாக சென்ற தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்ற முதியவர், அந்த மின் கம்பி மீது இடறி விழுந்து உள்ளார். இதனால் அவர் மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே மயங்கி உள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்காக அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அரவிந்தன் (பொறியியல் பட்டதாரி) என்பவர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவரும் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இரண்டு பேரும் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியான தகவலின் படி, அந்த லாரி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. லாரியின் ஓட்டுனர் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %