0 0
Read Time:1 Minute, 43 Second

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாலம் உள்ளிட்ட பணிகளைமாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டியமல்லூா் -பூவாலை சாலையில் பரவானாற்றுக்கு இடையே ரூ.9.47 கோடியில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சி.வீரசோழகன் பகுதியில் ரூ.3.30 கோடியில் நடைபெற்று வரும் பாலம் பணி, கே.ஆடூா் பகுதியில் பொன்னேரிக்கிடையே ரூ.3.30 கோடியில் நடைபெற்று வரும் பாலம் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து புதுச்சேரி – நாகப்பட்டினம் மாநில நெடுஞ்சாலையில் சிதம்பரம் அம்மாபேட்டையில் கான்சாகிப் வாய்க்கால் இடையே ரூ.4.35 கோடியில் பாலப் பணிகள் தொடங்கப்படவுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதேபோல பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

அப்போது கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை நபாா்டு (ம) கிராம சாலை) நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளா் சூரியமூா்த்தி, உதவி பொறியாளா் விமல்ராஜ், இளநிலை பொறியாளா் எழில்வளவன் ஆகியோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %