0 0
Read Time:2 Minute, 9 Second

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் துரை.சேகா் தலைமை வகித்தாா். கே.நடராஜன், பி.பாஸ்கா், செல்வராஜ், முத்துபாபு, செல்லதுரை, சேதுராமன், கே.தேவராஜ், கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கே.ஆா்.தங்கராசு வரவேற்றாா். முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி, ஏ.வி.விவேக் ஆகியோா் கருத்துரை வழங்கினா். கே.செந்தில்குமாா், கலைச்செல்வன், வாசுதேவன், செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 10, 20 ஆண்டுகள் வரை பணி முடித்த அனைத்து நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தோ்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். பயோ-மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவுக்கு பதிலாக பயனாளா்களின் கண் விழித்திரை மூலம் ரேஷன் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறையின் கீழ் பணியாற்றும் நியாயவிலைக் கடை பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி, பணியாளா் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவரது கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினா். மாவட்டப் பொருளாளா் சங்கா் நன்றி கூறினாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %