0 0
Read Time:1 Minute, 25 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே பாலையூர் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

சோதனையில் நான்கு சக்கர வாகனத்தில் சாராயம் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காரிலிருந்த சுமார் 400 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் காரினை ஓட்டி வந்த காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த வேலன்ராஜ் என்பவனை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிருபர்:யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %