1 0
Read Time:1 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அகோரம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி காட்சி இணையதளங்களில் பரவியது. இதனால் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரத்தையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் இன்று சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரத்தை நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரத்திற்கு சால்வை அணிவித்து, பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்துக் கூறினார்.

நிருபர்:யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %