0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது சான்றிதழ்களை சமர்பித்து கலந்து கொண்டனர்.

மேலும் காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தி அவர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினர். தொடர்ந்து இதில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் மாற்றுத்திறனாளிகள் ஏழு பேருக்கு மூன்று சக்கர வாகனம், ட்ரை சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து முகாமினை பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %