3 0
Read Time:1 Minute, 27 Second

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் ஜோதிடம் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்றன.

ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய 3 பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 24 வது தேர்வுகள் இன்று நடைபெற்றன. நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆடவர் பெண்கள் என்று இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட கலையில் பயின்று, தேர்வு எழுதினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %