0 0
Read Time:2 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எம்.ராஜ்குமார், மாநில செயலாளர் மனோகரன் ஆகியோர் ஆலோசனைப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் செயலாளர் முகம்மது மன்சூர் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் நத்தம் எஸ்.சதிஷ் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆக்கூர் ஆர். சுந்தர், பொருளாளர் முகமது ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் விஜய்கரன் வரவேற்றார்,

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, சந்தா தொகை செலுத்தாதவர்களை நீக்கிவிட்டு புதிய பொருப்பாளகள் நியமிப்பது, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது.

முன்னதாக சங்கரன்பந்தல் கடைதெருவில் மரக்கன்றுகள் நட்டு துவங்கி வைக்கப்பட்டது. புதியதாக சங்கத்தில் உறுப்பினர்கள் தங்களின் சந்தா தொகையினை செலுத்தி இனைத்துக்கொண்டனர் . பிறகு மக்களின் நலன், சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி பொருப்பாளர்கள் ஆலோசனை நடைபெற்றது. முடிவில் ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %