1 0
Read Time:2 Minute, 1 Second

மயிலாடுதுறையில், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவரை ‘போக்சோ’ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சிற்றரசன்(வயது 31). டிராக்டர் டிரைவரான இவர், 16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கர்ப்பமான அந்த சிறுமி சமீபத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது சிகிச்சை அளித்த டாக்டர்கள் 16 வயது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று 16 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சிறுமி தனது தாயார் சம்மதத்துடன் சிற்றரசனை திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிற்றரசனையும், அவருக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரையும் கைது செய்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %