0 0
Read Time:3 Minute, 14 Second

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை வாங்குவதில் 2 மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கீழமூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் கருணதேவன் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(38), ஜெயலட்சுமி(39) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமிக்கு 2 குழந்தைகளும், புவனேஸ்வரிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கருணதேவனுக்கு, அவருடைய 2 மனைவிகளோடு தினசரி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த கருணதேவன், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து முதல் மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணதேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிவடைந்து கருணதேவனின் உடலை அவரது உறவினா்களிடம் ஒப்படைக்க வந்தனர். அப்போது மனைவிகள் இருவரும், கருணதேவன் உடலை நான் தான் வாங்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டனர். 

இதில் புவனேஸ்வரி தான் வாழ்ந்த தெற்கு மாங்குடி பகுதியில் தான் தனது கணவர் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும், ஜெயலட்சுமி தான் வாழ்ந்த பள்ளிப்படை பகுதியில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்றும் கூறி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து 2 பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதில் முடிவு எட்டப்படாததால், கருணதேவனின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது. கணவனின் உடலுக்காக 2 மனைவிகளும் போட்டி போட்டுக்கொண்ட சம்பவத்தால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %