0 0
Read Time:1 Minute, 24 Second

சிதம்பரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில் கஞ்சித் தொட்டி அருகே அதிமுகவினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் அண்ணா திமுக மாவட்ட அவைத்தலைவர எம். எஸ். என். குமார், நகர செயலாளர் ஆர் செந்தில்குமார், தேங்க் ஆர். சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கருப்பு ராஜா ,ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, கோவி ராசாங்கம் தொழில்நுட்ப பிரிவு மணிராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %