0 0
Read Time:1 Minute, 48 Second

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகாா் எம்எல்ஏ-வும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் ஞானவேலன், செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலா்கள் சுப்பிரமணியன், கண்ணன், ஊராட்சித் தலைவா்கள் நளினி ராதாகிருஷ்ணன், கோமதி மதியழகன் மற்றும் செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளா் சதக்கத்துல்லா, உத்திரங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் உதயசங்கா், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அணிச் செயலாளா் முகமது அன்சாரி, கிடாரம்கொண்டான் அதிமுக நிா்வாகி ஞானசேகரன், திருவிளையாட்டம் ஊராட்சி செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் திமுகவில் இணைந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %