0 0
Read Time:1 Minute, 33 Second

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தன.

ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லிஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வகை மதுபானங்களில் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று டாஸ்மாக் அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்த ரக மதுபானங்கள் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும், உயர் ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும், மொத்த விற்பனை கூடங்களிலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தன. இந்த விலை உயர்வு மது குடிப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %