0 0
Read Time:1 Minute, 7 Second

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதங்கங்களை வென்றது.

இந்நிலையில், பி4 மிக்ஸ்டு 50 மீட்டர் பிஸ்டல் (எஸ்.எச் 1) பிரிவில், இந்தியாவின் மணீஷ் நர்வால் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே பிரிவில் சிங்ராஜ் வெள்ளி வென்றுள்ளார். சிங்ராஜ் ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %