0 0
Read Time:1 Minute, 16 Second

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து, 7 சவரன் நகை மோசடி செய்த போலி அண்டா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நாகலாபுரம் சாலையில் சக்தி வாராகி என ஆசிரம் நடத்தி வந்த சக்தியிடம், தங்க பேச்சியம்மாள் குறி கேட்கச் சென்றதாகவும், அவரின் கணவரின் ஆத்மா சாந்தியடையாததால் பல்வேறு பிரச்சினைகள் வருவதாக கூறி இரண்டரை சவரன் நகையை வாங்கிக் கொண்டு 30 ஆயிரம் பணம் மட்டும் வழங்கி குடியிருந்த வீட்டை இடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 7 கிராம் தங்கம் மற்றும் 3ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கப்பேச்சியம்மாள் அளித்த புகாரை அடுத்து போலீசார் போலி அண்டா சாமியார் சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %