0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு வரவேற்புரையாற்றினார் குத்தாலம் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி தொகுப்புரை ஆற்றினார். இதில் மயிலாடுதுறை நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் முன்னிலை வகித்தார். மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் பொறியாளர் செந்தில் அதிபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.இந்த நிகழ்வில் செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தார்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மோகன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இறுதியில் மாநில மாணவரணி துணை செயலாளர் சத்திய குமாரன் நன்றி உரையாற்றினார்.

இதற்கான விழா ஏற்பாடுகளை தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக செய்திருந்தது.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %