0 0
Read Time:1 Minute, 58 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழைய கொண்டு ஊராட்சியில் மறைந்த திமுக மூத்த முன்னோடி கலியபெருமாள் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு கலந்து கொண்டு கலியபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்து திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், பால.அருட்செல்வன், ஜெகவீரபாண்டியன் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், அருண்பிரியா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் செல்வம், பழைய கூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை செல்வராஜ், ராமநாதன், ராமநாதன் மற்றும் கலியபெருமாளின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %