0 0
Read Time:1 Minute, 17 Second

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை நிறுவப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தித்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும் என்றார்.

காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சிலை நிறுவப்படும். சென்னை காந்தி மண்டபம், காமராஜர் மண்டபங்கள் 3 கோடியில் புனரமைக்கப்படும், பணியின் போது இயற்கை எய்தும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நிதி மூன்று லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும், பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %