2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமம் ஆன்லைன் (online)
மூலமாக வழங்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வணிகர்கள் இவ்வாண்டு தீபாவளி
பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை உரிமதல கட்டிடத்தின் நீலவரைபடம், இடம் உரிமத்திற்கான ஆவணம், வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ.500 செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு , முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்ப அட்டை/ஸ்மார்ட் கார்டு) சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்-2 ஆகியவற்றுடன் http://serviceonline.gov.in/tamilnadu என்ற இணையதள முகவரியில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்து தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற்றுக்கொள்ள ஆன்லைன் மூலமாக 01.09.2021 முதல் 30.9.2021 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் 30.09.2021-க்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
நிருபர்:யோகுதாஸ், மயிலாடுதுறை.