0 0
Read Time:1 Minute, 39 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் பங்கேற்று அனைத்து சமுதாய தலைவர்களிடம் தங்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் மாவட்ட தலைவர்மாங்குடி எஸ்.பிரபாகரன் அவர்கள் பங்கேற்று பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது, சாதி பட்டியலில் வள்ளுவன் திருவள்ளுவர் என்ற இரு பிரிவுகளும் இணைத்து வள்ளுவன் என்ற பெயரில் மாற்றி தரவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியும்,அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வரையறையில் வள்ளுவர் இனத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியும், நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் அண்ணாமலையிடம் நேரில் வழங்கினார்கள். இந்நிகழ்வில் நமது நகை வள்ளுவர் குல சங்கத்தின் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %