0 0
Read Time:1 Minute, 41 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல் செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோன்று தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு செம்பை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கண்ணன் மாலை அணிவித்தார். வழங்கி நிகழ்ச்சியில் திரளான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்று இனிப்புகள் வழங்கி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %