0 0
Read Time:1 Minute, 56 Second

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பால.அருள்செல்வன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த.விஜயகுமார், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக, மூத்த முன்னோடிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %