0 0
Read Time:3 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம். குத்தாலம் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மங்கைநல்லூரில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் தலைமையிலும் செம்பனார்கோவில் ஒன்றியம் கலந்தாய்வுக் கூட்டம் பொறையாரில் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் தலைமையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருகின்ற 9.10.2021 அன்று நடைபெற இருக்கின்ற காட்டுச்சேரி மற்றும் தத்தங்குடி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் சம்பந்தமாக கலந்தாலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சி குத்தாலம் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி என் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், செம்பை ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனு படிவங்கள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சந்திரபாடி, தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %