0 0
Read Time:5 Minute, 29 Second

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). ரவுடி. இவருடைய மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 16&ந்தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சென்று சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடி வீரா என்கிற வீராங்கன் என்பவரின் தலையை துண்டித்து கொலை செய்தார். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணன் உள்பட 5 பேரை கெடிலம் பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் பிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை மட்டும் போலீசார் அழைத்துக்கொண்டு மற்ற குற்றவாளிகளை தேட சென்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தீபனின் கழுத்தை கிருஷ்ணன் அறுக்க முயன்ற போது அவர் தனது துப்பாக்கியால் கிருஷ்ணனை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காந்திமதி அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சீனுவாசன் நகரில் இறக்கி விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து காந்திமதியை சரமாரியாக கத்தியால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர்.
இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் காந்திமதியை அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. 

பின்னர் 4 பேரையும் போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் காந்திமதியின் கள்ளக்காதலன் குப்பங்குளத்தை சேர்ந்த அரவிந்த் என்கிற வீரமணி (23), அவரது நண்பர்கள் 19 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது.கிருஷ்ணனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற பிறகு அவரது நண்பரான குப்பங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்த் என்கிற வீரமணி (23) என்பவருடன் காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து காந்திமதியை சந்திக்க அவரது வீட்டுக்கு அடிக்கடி அரவிந்த் வந்து சென்றார். இதை பார்த்த காந்திமதியின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அரவிந்தை தனது வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவரை மிரட்டிச்சென்றதாக தெரிகிறது. இதை காந்திமதி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.இதை மனதில் வைத்துக்கொண்டு அரவிந்த் தனது நண்பர் 16 வயது சிறுவனிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு காந்திமதியை 16 வயது சிறுவன் சுப்புராயலுநகர் சீனுவாசன்நகரில் இறக்கி விட்டார். பின்னர் 4 பேரும் சேர்ந்து காந்திமதியை கத்தியால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் அரவிந்த் மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 4 பேரையும் 5 மணி நேரத்தில் பிடித்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %