0 0
Read Time:1 Minute, 43 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு 7.769 -க்கும் சராசரி 70.40-க்கும் விலை போனது மொத்தம் 374 விவசாயிகள், 12 வியபாரிகள், 498 குவிந்தார்கள் 950 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும் நாகை விற்பனை குழு செயலாளர் மற்றும் தனி அலுவலர் கூறியதாவது இது போல் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலகடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற விளை பொருட்கட்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டும்.

மேலும் விளை பொருட்களை நாகை விற்பனை குழு கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதார்ண்யம், கீழ்வேளூர், திருபூண்டி, மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று அதிக விலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயன் அடைய வேண்டி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %