0 0
Read Time:1 Minute, 49 Second

மயிலாடுதுறை:1921 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி மதுரை வந்த மகாத்மா காந்தியடிகள் விவசாயிகள் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார். பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறிப் போனது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை இன்னமும் மாறவில்லை என்றும், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு அரை ஆடையில் விவசாயிகள் மாலை அணிவித்து முறையிட்டனர். இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியும், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %