2 0
Read Time:1 Minute, 20 Second

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரை தொழிற்சாலையில் வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், திமுக எம்பி ஆதரவாளர்கள் கொலை செய்ததாகவும் கூறி கோவிந்தராஜன் குடும்பத்தார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அப்போது அவர்களின் இல்லத்திற்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் இருந்தனர். சட்டப் போராட்டம் நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

நிருபர்: பில்லா, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %