0 0
Read Time:1 Minute, 32 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒற்றை பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.51 லட்சத்திற்கான காசோலைகளைமாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.

மேலும், இம்மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பெற்றோர் இருவரையும் / ஒற்றை பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதி பெற்று வழங்குவதற்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒற்றை பெற்றோர்/பெற்றோர் இருவரையும் இழந்த 20 குழந்தைகளுக்கு நிதியுதவி பெற்று வழங்கப்பட்டுள்ளது ஆட்சித்தலைவர் இரா.லலிதா தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்.சிவக்குமார் மற்றும் என் மாவட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ் மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %