0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூரில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா, நூருல் ஹிதாயா ஹிஃப்ழ் மதரஸா ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா, தாருல் ஹீஸ்னா மக்தப் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. நிர்வாக சபை தலைவர் ஜாமியா மஸ்ஜித் எஸ்.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக மதுரை ஜாமிஆ ரைஹான் அரபிக்கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ரஷாதி பள்ளி வாசலை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் பைலட், மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் தலைவர், ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், நூருல் ஹிதாயா ஹிஃப்ழ் மதரஸா நிர்வாகிகள், மாணவர்கள் சங்கத்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %