0 0
Read Time:2 Minute, 16 Second

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் முந்தினம் குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மூன்றாவது கட்டமாக மெகா கொரானா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களின் விழிப்புணர்விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களின் பெயர்களைப் பதிந்து குலுக்கல் முறையில் பத்து நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இந்தியன் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்படும் என ஊராட்சி தலைவர் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நபர்களுக்கு வெண்ணையூர் இந்தியன் வங்கி வணிக தொடர்பாளர் தீபிகா பகுதி மேலாளர் பாலாஜி அவர்களின் மூலம் மேற்படி பத்து நபருக்களுக்கும் ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் செலுத்தப்பட்டது. இதையடுத்து இன்சூரன்ஸ் செலித்தியதற்கான ஆவண படிவத்தை சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோயில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவர்களும் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி.தமிழ்வாணன் அவர்களும் ஆயுள் காப்பீடு படிவத்தை வழங்கினார்கள் உடன் ஊராட்சி செயலர் சிலம்பரசன் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %