0 0
Read Time:1 Minute, 49 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ராஜிவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கைவிட , வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட சட்டம் இயற்றகோரியும் பாரத் பந்த்தை ஆதரித்து சாலை மறியல் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏர் கலப்பையுடம் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மறியல் போராட்டத்தால் நாகை, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தரங்கம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %