0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடகளின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என். ரவி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %