0 0
Read Time:1 Minute, 16 Second

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் திடீரென மாயமானது.இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தீவிர விசாரணை நடத்தியதோடு, பணியின் போது கண்காணிப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ் ஏட்டு ராஜாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆவினங்குடிக்கும், போலீஸ்காரர் அரவிந்தன் திட்டக்குடி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %