0 0
Read Time:2 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருப்பூர் குமரன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கொடிகாத்த குமரனின் திருவுருவ படம் அலங்கரித்து மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கில அரசின் மிருக வெறி தாக்குதலுக்கு இன்னலாகி தனது இன்னுயிரை நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்தது பற்றி நாட்டு மக்களுக்கு மீண்டும் தேசப்பற்று ஏற்பட வேண்டும் என விளக்கமாக மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹலிக்குல் ஜமால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏ AIUWC ஐ யு டபுள் யு சி மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %