0 0
Read Time:2 Minute, 30 Second

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை கண்டித்தும் உடனடியாக பிரியங்க காந்தியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்..டி..ஐ. துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் வடக்கு வீதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ.துறை மாநில பொது செயலாளர் பி. ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.
ராஜா சம்பத் குமார் வரவேற்றார். தில்லை ஆர். மக்கின் ஜெமினி எம்.என்.ராதா ஆகியோர் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்திர பிரதேச பா.ஜ.க அரசின் நடவடிக்கை யை கண்டித்து பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான் ஆட்டோ டி.குமார் டி‌பட்டாபிராமன் முன்னாள் பொருளாளர் சம்பந்தம் பேன்சி எஸ் எஸ் நடராஜன் வெள்ளை (எ) பார்த்திபன் முன்னாள் வட்டார தலைவர் ராஜ்குமார் ஆர்.ஜோதிமணி ஆர்.டி.ஐ மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன், ஆர்.டி.ஐ.துறை சிதம்பரம் நகர தலைவர் திரு.விக்னேஷ் மாவட்ட நிர்வாகிகள் வசந்தராஜன், அரவிந்த், சையத் அபுசதாம், பாலாஜி, மணிரூபன், நகர நிர்வாகிகள் சுந்தர்ராஜன், அசோக்குமார், விக்னேஸ்வரன், நவீன்குமார், சூர்யா, ரோகித்சந்திரன், முத்துக்குமார், சந்தோஷ், லட்சுமிநாராயணன், சிவமணி, சிவபிரகாஷ் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தில்லை செல்வி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %