0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை அருகே அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கைநல்லூரில் அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி ஐம்பதுக்கு மேற்பட்டோர். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மங்கைசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %