0 0
Read Time:1 Minute, 25 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் 6.10.2021 அன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் மூதாதையர்களுக்கு திதி செலுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் அண்டை மாவட்டங்களிலுருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

எனவே மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் 6.10.2021 (புதன்கிழமை) அன்று முழுவதும் அன்றையதினம் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது மாவட்டத்தின் எந்த கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூடக்கூடாது
என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %