0 0
Read Time:1 Minute, 19 Second

விருத்தாசலம் ஆலிச்சிக்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது  35). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே, ஜங்ஷன் சாலையில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் காணவில்லை. 

நள்ளிரவில் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டிராவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %