0 0
Read Time:1 Minute, 19 Second

காரைக்கால் – மும்பை விரைவு ரயிலில் கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்களை நாகை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்காலில் இருந்து – நாகை வழியாக மும்பை செல்லும் விரைவு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை காரைக்கால் ரயில் நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த அந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரயிலின் ஒரு பெட்டியில் பயணிகள்அமரும் இருக்கையின்கீழ் வைக்கப்பட்டிருந்த 9 பைகளில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 111 புதுவை மாநில உயர்ரக வகை மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நாகைக்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %