0 0
Read Time:2 Minute, 8 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்த உத்தரபிரதேச அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுக்கும் மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து புவனகிரி நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், K.S.அழகிரி Ex.M.P., கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன், மாநில செயலாளர் சித்தார்த்தன் மாநில பொதுச் செயலாளர் சேரன் வட்டாரத் தலைவர் குமார் தொழிலதிபர் மணிரத்தினம் தலைமை கழக பேச்சாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புவனகிரி நகர தலைவர் கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் சிதம்பரம் நகர தலைவர் பாலதண்டாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %