0 0
Read Time:1 Minute, 15 Second

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் , வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உட்பட100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீட்டுக்காவலில் வைத்திருக்கும் பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய் என்பது போன்ற உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %