0 0
Read Time:1 Minute, 30 Second

மயிலாடுதுறை ஆனைக்கட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீர் நிரம்பியதை பாஜகவினர் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வழிபட்டனர்.

மயிலாடுதுறை வட்டம், மேல நாஞ்சில் நாடு பகுதியில் உள்ள ஆனைகட்டி குளத்துக்கு வரும் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அந்த குளம் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து காந்தி ஜெயந்தி அன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொக்லைன் இயந்திரம் மூலம் நீர் வரத்துப் பாதை தூர்வாரப்பட்டது. இதன் காரணமாக காவிரி நீர் வாய்க்கால் வழியே ஆனைக்கட்டி குளத்தில் நிரம்பியது.

இதையொட்டி நகர பாஜக சார்பில் குளக்கரையில் ஆரத்தி எடுத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி.பாரதி கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக குளத்தில் நீர் நிரப்பும் பணியை நகராட்சி ஆணையர் கே.பாலு மற்றும் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %