0 0
Read Time:2 Minute, 38 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா நேற்று இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பல்வேறு பகுதியில் தேடிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர் எங்கு கிடைக்காததை அடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என  புகார் அளித்தனர். 

இந்நிலையில் தனது மாமா பாலசுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சிறுமி இறந்து கிடத்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் குத்தாலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த குத்தாலம் காவல்துறையினர். சிறுமியின் உடல் அருகில் சென்று பார்த்ததில்  சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரையுடன் காணப்பட்டுள்ளது. இருந்ததால் சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணையை தொடங்கியுள்ள குத்தாலம் காவல்துறையினர் சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக  திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %