0 0
Read Time:1 Minute, 48 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மகிழி கிராமத்திலிருந்து ஒரு வேனில் 15 பேர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு கடலூருக்கு புறப்பட்டனர். டிரைவர் கலையரசன் வயது 34 என்பவர் வேனை ஓட்டினார். ஆக்கூர் பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள திருப்பத்தில் திரும்பியபோது வேன் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வேனில இருந்தவர்கள் அடியில் சிக்கியும் வெளியிலும் விழுந்து படுகாயம் அடைந்தனர் அவர்களின் அபயக் குரலைக் கேட்டு அக்கம் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மூர்த்தி (வயது) 63 உலகநாதன் 38 வளர்மதி 45 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கலையரசன் கைது செய்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %