0 0
Read Time:1 Minute, 39 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியிலிருந்து போட்டியிட்டனர்.

இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.செல்வம் 791 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 2249 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சபரிநாதன் 1458 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார்.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வத்திற்கு வெற்றி சான்றிதழ் தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்டது. பின்னர் திமுகவினர் ஊர்வலமாக சென்று செம்பனார்கோவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %