0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள் இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் ரிப்பன் கத்தரித்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகப்பா, மங்கை சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %