0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பெருஞ்சேரி பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரசன்னா(22) ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவியை அழைத்துச் சென்று கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோர் தனது மகள் எங்கு தேடியும் கிடைக்காததால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட பிரசன்னா மற்றும் மாணவி இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடையவே தொடர்ந்து அவனிடமிருந்து மாணவியை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் . மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி பிரசன்னாவை காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %