0 0
Read Time:1 Minute, 33 Second

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்பா காலனிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை மாற்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் தேடி கால்கடுக்க அலைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %