1 0
Read Time:1 Minute, 44 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பில் பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பாரதம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் தலைமையில் ஏராளமான சங்பரிவார் அமைப்புகள் கலந்து கொண்டன. போராட்டத்தில் பங்களாதேஷ் பயங்கரவாதிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக விஹெச்பி மாநில செயலாளர் ஞான குருஜி கலந்து கொண்டார். மேலும் விஹெச்பி மாவட்ட தலைவர் டாக்டர் ஜெய முரளி கோபிநாத், பஜ்ரங்தள் மாவட்டத் தலைவர் பில்லா, இணை தலைவர் சசிக்குமார், மாவட்ட பொருளாளர் முத்துக்குமரன், ஒன்றிய தலைவர்கள் மகேந்திரன், பரங்கிப்பேட்டை சாய், இளவரசன், கீரப்பாளையம் முருகன், மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் தாமரை மணிகண்டன், கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், s.v.ஸ்ரீதரன், கேப்டன் பாலசுப்பிரமணியம், ஏ ஆர் ரகுபதி, ரங்கராஜன், தாமரைக்கண்ணன், ஸ்ரீ பெருமாள், கஸ்பா வெற்றிச்செல்வன், மகளிர் அணியினர், மற்றும் ஏராளமான இந்து அமைப்புகள் கலந்து கொண்டன.

செய்தி: பில்லா,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %